tamilni 421 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

காசாவில் சிக்கியிருந்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

Share

காசாவில் சிக்கியிருந்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் நாட்டிற்கு அனுப்புவதற்கான வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்துள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 24 அன்று நாட்டை வந்தடைந்த குறித்த குடும்பத்தினரை, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்டுள்ளனர்.

மேலும், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் நாடு திரும்பியவர்களுக்கான தளவாடங்கள் மற்றும் விமான போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாக்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட தாக்குதலின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...