உலகம்

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share
24 66bfb396433db
Share

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை பதவிவிலகல் செய்துவிட்டு இந்தியாவில் (India) தஞ்சம் அடைந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவம் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசை இராணுவம் அமைத்தது.இந்த இடைக்கால அரசில் 17 ஆலோசகர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத் (Wahiduddin Mehmood), முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார் (Ali Imam Majumdar), முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான் (Muhammad Polajul Kabir Khan), லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி (Jahangir Alam Chowdhury) ஆகியோர் இவ்வாறு இடைகால அரசில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...