24 66bfb396433db
உலகம்

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை பதவிவிலகல் செய்துவிட்டு இந்தியாவில் (India) தஞ்சம் அடைந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவம் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசை இராணுவம் அமைத்தது.இந்த இடைக்கால அரசில் 17 ஆலோசகர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத் (Wahiduddin Mehmood), முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார் (Ali Imam Majumdar), முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான் (Muhammad Polajul Kabir Khan), லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி (Jahangir Alam Chowdhury) ஆகியோர் இவ்வாறு இடைகால அரசில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...

Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...