24 66bfb396433db
உலகம்

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை பதவிவிலகல் செய்துவிட்டு இந்தியாவில் (India) தஞ்சம் அடைந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவம் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசை இராணுவம் அமைத்தது.இந்த இடைக்கால அரசில் 17 ஆலோசகர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத் (Wahiduddin Mehmood), முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார் (Ali Imam Majumdar), முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான் (Muhammad Polajul Kabir Khan), லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி (Jahangir Alam Chowdhury) ஆகியோர் இவ்வாறு இடைகால அரசில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 691e417debfce
உலகம்செய்திகள்

பிரான்ஸில் வீட்டு உரிமையாளர்களுக்குச் சொத்து வரி உயர்வு: 2026 முதல் சராசரியாக €63 கூடுதல் சுமை!

பிரான்ஸ் அரசின் புதிய அறிவிப்பின்படி, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான வீடுகளுக்குச்...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...

691cc63de4b0849d3c3c4866
செய்திகள்உலகம்

நைஜீரியாவில் பாடசாலை விடுதியில் கொடூரம்: ஆயுதம் ஏந்திய குழுவினால் 25 மாணவிகள் கடத்தல் – பாதுகாவலர் சுட்டுக்கொலை!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலமான கெப்பி (Kebbi) மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் விடுதியில்...