18 10
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கப்போகிறது… எச்சரிக்கும் அமைப்பு

Share

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கப்போகிறது… எச்சரிக்கும் அமைப்பு

பிரித்தானியாவில் உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்க இருப்பதாக சில்லறை வர்த்தக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே மக்கள், தண்ணீர், மின்சாரம் முதலான அத்தியாவசிய விடயங்களுக்கான வரிகள் அதிகரிப்பால் அவதியுற்றுவரும் நிலையில், அவர்களுடைய சுமை வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாக The British Retail Consortium (BRC) என்னும் வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.

விரைவில், உணவுப்பொருட்களின் விலை சராசரியாக 4.2 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அமைப்பு.

பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ் கடந்த அக்டோபரில் அறிவித்த பட்ஜெட்டில் கூறப்பட்ட நடவடிக்கைகள்தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்கிறது BRC அமைப்பு.

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட, பணி வழங்குவோர் தேசிய காப்பீடு அதிகரிப்பு, தேசிய வாழ்வாதார ஊதியம் மற்றும் பேக்கிங் வரிகள் என, 2025இல் சில்லறை வர்த்தகர்களுக்கு சுமார் 7 பில்லியன் பவுண்டுகள் செலவு அதிகரிக்க உள்ளது.

ஆக, அவற்றின் தாக்கம் காரணமாக உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது.

அதனால், இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில், உணவுப்பொருட்கள் விலை சராசரியாக 4.2 சதவிகிதம் அதிகரிக்கலாம் என வர்த்தகத் துறை அதிகாரிகள் கருதுவதாக BRC அமைப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...