24 662ca2769edba
உலகம்செய்திகள்

கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வெள்ளம்

Share

கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வெள்ளம்

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் (Tanzania) நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன.

பல வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 236 பேர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, 200,000இற்கும் அதிகமான மக்கள் மற்றும் 51,000 குடும்பங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்நாட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவசர சேவைகளினால் மீட்டு வரப்பட்டு வருகின்றனர்.

ஆபிரிக்க நாடுகளில் பொதுவாக காணப்படும் எல் நினோ காலநிலையில் (El Nino climate) தொடர் மழையால் ஏற்பட்டுள்ள மாற்றமே இத்தகைய பாதிப்புக்கு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

எல் நினோ என்பது இயற்கையாக நிகழும் காலநிலை வடிவமாகும். இது பொதுவாக உலகளவில் அதிகரித்த வெப்பம், அத்துடன் வறட்சி மற்றும் கனமழை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இதன் காரணமாக, கடும் எல் நினோ மழை, பலத்த காற்று, வெள்ளம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஆகியவை அதிகரித்து கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்: மேலாளர்கள் உட்பட பலர் கைது என அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் அண்மைக்காலமாகத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட மூன்று...

world 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி: 10 இடங்களை முதன்மைப்படுத்த மாவட்ட செயலகம்

திட்டம்முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை எழில் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும்...

world 36
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தொடரும் கனமழை: 5 மாகாணங்களில் 75 மி.மீ-க்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ்த்தளத் தளம்பல் நிலை (Low-level atmospheric disturbance) காரணமாக, நாட்டின்...

world 35
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உதய கம்மன்பிலவுக்கு பொலிஸ் அழைப்பாணை: ரங்க ராஜபக்ஷவின் மரணம் குறித்து விசாரணை

தூய்மையான ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, எதிர்வரும் மே...