tamilni 126 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் தீவிபத்து

Share

வெளிநாடொன்றில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் தீவிபத்து

தென் கொரியாவில் இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் அந்நாட்டு நேரத்தில் காலை 11.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது பணியில் இருந்த 45 ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், இங்கு 540 மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மின் கசிவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சாலையில் சுமார் 200 பேர் பணிபுரிவதாகவும் அதிக அளவிலான இலங்கையர்களும் அங்கு பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...