1 6 1 scaled
உலகம்செய்திகள்

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

Share

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

பிரேசில் நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவரின் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸா பாலோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆகஸ்டு 18ம் திகதி 28 வயதேயான தல்லிதா பெர்னாண்டஸ் என்ற இளம் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது.

தல்லிதா திடீரென்று மாயமான நிலையில், அவரது நண்பர்களே பொலிசாருக்கு தகவல் அளித்து, விசாரிக்க கோரியுள்ளனர். இந்த நிலையில், அவரது குடியிருப்புக்கு சென்ற பொலிசார், சூட்கேசுக்குள் அவரது நிர்வாண உடல் அடைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவரது காதலன் மார்டின் சில்வா மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்குமேல் 4.15 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பொலிசார், குளியலறையில் ரத்தக்கறை படிந்திருப்பதை கவனித்துள்ளனர். படுக்கையறையிலும் ரத்தக்கறை காணப்பட்டுள்ளது. மேலும், அந்த அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மருத்துவர் தல்லிதாவின் நிர்வாண சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தல்லிதாவின் காதலனை விசாரணைக்காக தொடர்புகொள்ள முயன்ற பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேலும், மருத்துவர் தல்லிதாவை தொடர்புகொண்ட ஒருவருக்கு, வேலைப்பழு அதிகமாக உள்ளது, இப்போது பதிலளிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவரது குறுந்தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய நாள் அவர் பணிக்கு செல்லவில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்திற்கு முன் காலையில் சண்டை சத்தம் குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் செய்ததாக கட்டிடத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குடியிருப்பில் இருந்து மருத்துவரின் காதலன் தனியாக புறப்பட்டு சென்றதையும் நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...