tamilni 358 scaled
உலகம்செய்திகள்

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர்… வைரலாகும் படம்

Share

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர்… வைரலாகும் படம்

அயோத்தியில் நிகழும் கும்பாபிஷேக விழாவின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் மீது ராமர் காட்சியளிப்பது போன்று வைரலாகிய படமாகும்.

இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்து, இணையத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது எனலாம்.

படத்தில் ராமர் முனிவர் போல் உடையணிந்து, மேலே ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதப்பட்டு புர்ஜ் கலிஃபாவில் காட்சியளிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தைப் பகிர்ந்தவர்கள் இது உண்மையானது என்று கூறினர். அதற்கு பலரும் உண்மையானதா என்று கேட்டுள்ளனர்.

Google இல் தேடும் போது புர்ஜ் கலீஃபா அதே வெளிச்சத்தில் இருப்பது போன்று இருகிறது. ஆனால் அதில் பகவான் ராமர் படவில்லை.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவி ஏதாவது நிகழ்வு நிகழ்ந்தால், அது தொடர்பான படங்கள் அதன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பகிரப்படும்.

ஆனால் இதுபோன்ற எந்தப் பதிவும் அதன் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை.

இதேபோன்ற சம்பவம் ஏப்ரல் 2023 இல் நடந்தது, ஆனால் அதுவும் போலியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...