11 6
உலகம்செய்திகள்

ஜேர்மன் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்யும் அழகிய இளம்பெண்கள்

Share

ஜேர்மன் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்காக அழகிய இளம்பெண்கள் சிலர் பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இணையத்தில் உலாவரத் துவங்கியுள்ளன.

அந்த அழகான இளம்பெண்கள், வலதுசாரிக் கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள்.

யார் அவர்கள் என்று உற்றுப்பார்த்தால் தெரிகிறது, அவர்கள் உண்மையான பெண்கள் அல்ல. அவை, AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உருவங்கள் மட்டுமே.

ஆக, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்தப்படும் நிலையில், அது தேர்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த AI பெண்கள், புலம்பெயர்தலுக்கு எதிராகவும், வலதுசாரியினருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலம்பெயர்ந்தோர் முரட்டுத்தனமானவர்கள் என்றும், வெளிநாட்டவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்கள் என்னும் ரீதியிலும் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

பேசுபவர்கள் அழகான இளம்பெண்கள் என்பதால் அவர்கள் கூறுவதை மக்கள் உற்றுக் கவனிக்கக்கூடும் என்றும், பேசுபவர் யார் என்பதை விட அவரது கருத்துக்கள் வலுவானவையாக இருப்பதால், அவை மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் சிலர்.

சிலர், இந்த வீடியோக்களை உற்று கவனித்தாலே அவை போலியானவை என தெரிகிறது. ஆகவே, அவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள்.

ஆக, இந்த AI பெண்களும் வீடியோக்களும் வரும் பொதுத்தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...