24 65d079170e7d3 md
உலகம்செய்திகள்

முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர்

Share

முறைகேடு குற்றச்சாட்டினால் தப்பியோட்டம்! நாடு திரும்பியதும் சிறை..விடுதலையாகும் முன்னாள் பிரதமர்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த காலத்தில் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra), ஆட்சிக்காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறை செல்வோம் என பயந்து தக்சின் ஷினவத்ரா (74) வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். ஆனால் அவர் மீண்டும் நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், தாய்லாந்து மன்னர் Maha Vajiralongkorn அவரது சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தார்.

இதற்கிடையில் தக்சின் உடல்நலக்குறைவு காரணமாக பாங்காக் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போதைய தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin), நாளை தக்சின் ஷினவத்ரா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...