24 664124ca68a78
உலகம்செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி

Share

எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார்.

நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும்.

இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா முதன்முறையாக 1994இல் எவரெஸ்ட் சிகரத்தை தனது 24 வயதில் ஏறி சானை புரிந்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 இல் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது, மே 2021 இல் காமி ரீட்டா தனது 25ஆவது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார்.

2023 இல், கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்ததோடு, தொடர்ந்து அந்த ஆண்டு மே மாதமே காமி ரீட்டா தனது 28ஆவது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் குறித்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், காத்மாண்டுவில் இருந்து ஸ்பிரிங் சீசன் எவரெஸ்ட் பயணத்தை 28 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட அவர், உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் 71 ஆண்டுகால மலையேறுதல் வரலாற்றில் அதிக அளவில் 29ஆவது முறையாகவும் மே 12ஆம் திகதி காலை ஏறி வராலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...