tamilni 263 scaled
உலகம்செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

Share

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து கென்யா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நைரோபியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் “electronic travel authorization” இருந்தால் கென்யாவிற்கு செல்லலாம் எனவும் உலகெங்கிலும் உள்ள பயணிகள் கென்யாவுக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் காங்கோ குடியரசில் நடந்த ஒரு மாநாட்டில் விசா விலக்குகளுக்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ரூட்டோ முன்னர் கோடிட்டுக் காட்டியிருந்தார்

இதன்படி ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விசா இல்லாமல் கென்யாவுக்குச் செல்ல முடியும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை ஒரு பரந்த முயற்சியை பிரதிபலிப்பதோடு பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாகும்.

சர்வதேச பார்வையாளர்களின் ஈர்ப்பு அதன் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது.

இதற்கமைய விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு, அதிகமான சர்வதேச பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இலவச உள்நுழைவு விசாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...