உலகம்செய்திகள்

வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம்

Share

வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம்

ஜேர்மனியில், அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் தங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மோசமாக விமர்சித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மோசமாக விமர்சித்த பணியாளர்கள்
ஜேர்மன் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில், தங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, இன ரீதியாகவும், காயப்படுத்தும் வகையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும், பாலின ரீதியிலும் விமர்சித்ததுடன், அவர்கள் முகத்தில் குத்தவேண்டும் என்பது போன்ற வன்முறைக்கு வழிவகை செய்யும் கருத்துக்களையும் பல ஆண்டுகளாக பகிர்ந்துவந்துள்ளார்கள்.

ஆனால், அவர்களுடைய உரையாடல்கள், பணியாளர் கவுன்சில் மற்றும் மனித வள மேலாளர் ஆகியோருக்கு லீக்கானதைத் தொடர்ந்து, அந்த குரூப்பில் இருந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து பணியாளர்களில் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார். இது அவர்களுடைய தனிப்பட்ட விடயம் என்று கூறி, கீழ் நீதிமன்றம் ஒன்று பணியாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், அவர்கள் பணியாற்றிவந்த நிறுவனம் பெடரல் தொழிலாளர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.

வழக்கை விசாரித்த பெடரல் நீதிமன்றம், அந்த வாட்ஸ் ஆப் குரூப்பிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை பெரியது என்பதாலும், அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் மற்றும் இன ரீதியாக விமர்சித்துள்ளதையும் பார்த்தால், பணி நீக்கம் செய்யப்பட்ட நபர் அவர்களுடைய விமர்சனங்களை தனி நபர் உரிமையாக பார்க்கமுடியாது என்று கூறி, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே என தீர்ப்பளித்துவிட்டது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...