உலகம்செய்திகள்

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்யும் எலான் மஸ்க்

Share
15 6
Share

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்யும் எலான் மஸ்க்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளரான எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை அளித்துள்ளார்.

அதிலிருந்தே உலக அரசியல்வாதியாகிவிட்டார் எலான் மஸ்க். ஆம், உலக நாடுகளின் அரசியலில் என்ன நடந்தாலும், அதை விமர்சிப்பதே இப்போது எலான் மஸ்குக்கு முக்கிய வேலையாகிவிட்டது.

இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைக் கேலி செய்யும் வகையில், சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க்.

2025 அருமையாக காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டார், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டார், கெய்ர் ஸ்டார்மரைக் குறித்த உண்மை வெளிவந்துவிட்டது, சரியான நேரத்தில் மாபெரும் மனிதர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள், நமக்கு அவர்கள் எல்லாரும் தேவை என்று கூறி, உலக நிகழ்வுகள் பலவற்றை வரிசையாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ட்ரம்ப், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும் கேலி செய்துவரும் நிலையில், தற்போது எலான் மஸ்கும் தன் பங்குக்கு ட்ரூடோவை கேலி செய்துள்ளார்!

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...