20 9
உலகம்செய்திகள்

பிரித்தானிய பிரதமரை பதவியிலிருந்து இறக்க சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள எலான் மஸ்க்

Share

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற தன் பணத்தை வாரி இறைத்தாலும் இறைத்தார், எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர் என்ற நிலையிலிருந்து உலக அரசியல்வாதி என்னும் நிலையை எட்டிவிட்டார்!

ஆம், உலக நாடுகளின் பிரச்சினைகள் அனைத்தையும் ஒற்றை ஆளாக தீர்ப்பது என கங்கணங்கட்டிக்கொண்டுள்ளார் போலிருக்கிறது எலான் மஸ்க்.

பல்வேறு நாடுகளின் உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்துவரும் எலான் மஸ்க், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்க, தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டார்மரை, அடுத்த பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு முன் பதவியிலிருந்து இறக்குவதற்காக, தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகளுடன் எலான் மஸ்க் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எதனால் கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து இறக்க எலான் மஸ்க் விரும்புகிறார், ஸ்டார்மரிடம் அவருக்கு என்ன பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை.

ஆனாலும், பிரித்தானியாவில் சிறுமிகளை ஏமாற்றி சீரழிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களான கும்பல்கள் குறித்த செய்திகள் பரவிவருகின்றன, அவை நாடாளுமன்றம் வரை எதிரொலித்துவருகின்றன.

அந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அவர் சார்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்திவருகிறார் எலான் மஸ்க்.

இப்படி பிரித்தானிய அரசியலில் எலான் மஸ்க் தலையிட்டுள்ள நிலையில்தான், தற்போது ஸ்டார்மரை பிரதமர் பதவியிலிருந்து இறக்க எலான் மஸ்கும் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டுவருவதாக Financial Times பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...