25 683c1f6f06326
உலகம்

எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு

Share

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது போதை பொருள் பயன்படுத்தியதாக சர்வதேச பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க் அதனை மறுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

”நான் இப்போது எந்தவிதமான போதை மருந்துகளும் பயன்படுத்தவில்லை. நியூயோர்க் டைம்ஸ் பொய் சொல்கிறது,” எனக் கண்டித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்னர் மனச்சோர்வுக்கு மருத்துவர் பரிந்துரைத்த ‘கேட்டமீன்(ketamine)’ மருந்தை எடுத்தேன். அதை நான் எக்ஸ்-இல் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.

இது புதுசான செய்தியல்ல. அதையும் நிறுத்திய நிலையில் இருக்கிறேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் , மஸ்கின் மருந்து பழக்கத்தைப் பற்றி கேட்ட போது “எனக்கு தெரியாது.

ஆனால் எலான் ஒரு அருமையான நபர்,” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை நியமித்திருந்தார்.

அந்த பதவியில் இருந்து சமீபத்தில் எலான் மஸ்க் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...

07 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்: போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள 3 நிபந்தனைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு,...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....

30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...