மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி
உலகம்செய்திகள்

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி

Share

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி

கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த சிங்ஹுவா பல்கலைக் கழகம் மழைத்துளிகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

வெயில் நேரங்களில் சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகளை சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரமாக சேமித்து மின்சாதனங்களுக்குப் பயன்படுத்த இயலும்.

பல நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் மேல் மாடியில் சோலார் பேனல்கள் பொருத்தி சுயமாக தங்களின் தனிப்பட்ட பயன்களுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

சோலாரின் மின் உற்பத்தி சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் கதிர்வீச்சுகளை, சோலார் தகடுகள் உறிஞ்சிக் கொள்ளும்.

அதுவே மின்சாரமாக மாற்றப்படுகிறது. சோலார் தகடுகள் மீது சூரிய ஒளிபடும்போது, தகடில் உள்ள ஃபோட்டோ வோல்டாயிக்ஸ் செல்கள், சூரிய ஒளியை உறிஞ்சி மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது.

அதை மின்கலன்கள் (Battery) மூலம் சேமித்து விளக்குகள் உள்ளிட்ட இதர மின்சாதனப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம்.

மழையில் மின் உற்பத்தி வெயில் காலத்தில் வெப்பக் கதிர்வீச்சுகளைக் கொண்டு சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெறுவதைப் போன்று தற்போது மழைத்துளிகள் மூலமும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

இதேபோன்று டிராப்லட் டிரைபோ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (D-TENG) செல்கள், அலைகள் மற்றும் திரவத் துளிகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த செல்கள் (மழைத்துளி விழும்போது ஏற்படும் ஆற்றல்) இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.

அதனை மின்கலன் கொண்டு சேமித்து மின்சாரப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுகையில், அதிக எண்ணிக்கையிலான சோலார் பேனல்களை அடுத்தடுத்து இணைப்பு கொடுத்து அடர்த்தியாக வைப்பதன் மூலம் மழைத்துளியிலிருந்து குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தியை செய்ய முடியும்.

மழையிலிருந்து மின்சாரம் தயாரிக்க மிக எளிமையான வழி இது. இந்த ஆய்வின் மூலம், சோலார் பேனல் தொழில்நுட்பம் நம்பகமான மேம்பாட்டை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...