மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி
உலகம்செய்திகள்

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி

Share

மழையிலிருந்து மின்சாரம்: சீன விஞ்ஞானிகள் முயற்சி

கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும் காலம் முடிந்து தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த சிங்ஹுவா பல்கலைக் கழகம் மழைத்துளிகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

வெயில் நேரங்களில் சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகளை சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரமாக சேமித்து மின்சாதனங்களுக்குப் பயன்படுத்த இயலும்.

பல நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் மேல் மாடியில் சோலார் பேனல்கள் பொருத்தி சுயமாக தங்களின் தனிப்பட்ட பயன்களுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.

சோலாரின் மின் உற்பத்தி சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் கதிர்வீச்சுகளை, சோலார் தகடுகள் உறிஞ்சிக் கொள்ளும்.

அதுவே மின்சாரமாக மாற்றப்படுகிறது. சோலார் தகடுகள் மீது சூரிய ஒளிபடும்போது, தகடில் உள்ள ஃபோட்டோ வோல்டாயிக்ஸ் செல்கள், சூரிய ஒளியை உறிஞ்சி மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது.

அதை மின்கலன்கள் (Battery) மூலம் சேமித்து விளக்குகள் உள்ளிட்ட இதர மின்சாதனப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம்.

மழையில் மின் உற்பத்தி வெயில் காலத்தில் வெப்பக் கதிர்வீச்சுகளைக் கொண்டு சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெறுவதைப் போன்று தற்போது மழைத்துளிகள் மூலமும் மின் உற்பத்தி செய்ய முடியும்.

இதேபோன்று டிராப்லட் டிரைபோ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (D-TENG) செல்கள், அலைகள் மற்றும் திரவத் துளிகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த செல்கள் (மழைத்துளி விழும்போது ஏற்படும் ஆற்றல்) இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது.

அதனை மின்கலன் கொண்டு சேமித்து மின்சாரப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுகையில், அதிக எண்ணிக்கையிலான சோலார் பேனல்களை அடுத்தடுத்து இணைப்பு கொடுத்து அடர்த்தியாக வைப்பதன் மூலம் மழைத்துளியிலிருந்து குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தியை செய்ய முடியும்.

மழையிலிருந்து மின்சாரம் தயாரிக்க மிக எளிமையான வழி இது. இந்த ஆய்வின் மூலம், சோலார் பேனல் தொழில்நுட்பம் நம்பகமான மேம்பாட்டை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...