13 33
உலகம்செய்திகள்

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

Share

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 18 அன்று அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு குறிப்பிட்ட தொகுப்பு எண்ணிக்கைகளைக் கொண்ட பாக்கெஜ்களை திரும்பப்பெறும்.

தினசரி பயன்படுத்தப்படும் Golden Valley, Compliments, Foremost, IGA, No Name மற்றும் Western Family என்ற ஆறு பிராண்டுகளின் முட்டைகள்தான் திரும்ப பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட முட்டைகளை சேகரிக்க வேண்டிய தொகுப்பு எண்ணிக்கைகள் CFIA இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கும் முட்டைகளுக்காகும்.

சால்மொனெல்லா தொற்றானது பொதுவாக கால்நடை மற்றும் மனித குடல்களில் காணப்படும் பாக்டீரியாகும்.

வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஆகும்.

பாதிக்கப்படுபவர்கள் பலர் சில நாட்களிலேயே குணமாகினாலும், ஒரு சிலர் நீண்ட கால உடல் நிலை சிக்கல்களுக்குப் போகக்கூடும்.

பாதிக்கப்பட்ட முட்டைகளை உட்கொள்ளவோ அல்லது விற்கவோ கூடாது. அவற்றை குப்பையில் வீசலாம் அல்லது வாங்கிய இடத்திலேயே திரும்ப கொடுக்கலாம்.

தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் சால்மொனெல்லா அபாயத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...