13 33
உலகம்செய்திகள்

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

Share

கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 18 அன்று அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு குறிப்பிட்ட தொகுப்பு எண்ணிக்கைகளைக் கொண்ட பாக்கெஜ்களை திரும்பப்பெறும்.

தினசரி பயன்படுத்தப்படும் Golden Valley, Compliments, Foremost, IGA, No Name மற்றும் Western Family என்ற ஆறு பிராண்டுகளின் முட்டைகள்தான் திரும்ப பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட முட்டைகளை சேகரிக்க வேண்டிய தொகுப்பு எண்ணிக்கைகள் CFIA இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கும் முட்டைகளுக்காகும்.

சால்மொனெல்லா தொற்றானது பொதுவாக கால்நடை மற்றும் மனித குடல்களில் காணப்படும் பாக்டீரியாகும்.

வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஆகும்.

பாதிக்கப்படுபவர்கள் பலர் சில நாட்களிலேயே குணமாகினாலும், ஒரு சிலர் நீண்ட கால உடல் நிலை சிக்கல்களுக்குப் போகக்கூடும்.

பாதிக்கப்பட்ட முட்டைகளை உட்கொள்ளவோ அல்லது விற்கவோ கூடாது. அவற்றை குப்பையில் வீசலாம் அல்லது வாங்கிய இடத்திலேயே திரும்ப கொடுக்கலாம்.

தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் சால்மொனெல்லா அபாயத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....