24 665a8517dfed7
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவின் அரசியலில் கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

Share

பிரித்தானியாவின் அரசியலில் கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், உமா குமரன் (Uma Kumaran) என்னும் பெண்மணியே இவ்வாறு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொகுதியானது லேபர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வெற்றிவாய்ப்புக்களை கொடுக்கும் தொகுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள உமா குமரனுக்கு கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

அத்தோடு தங்கம் டெபோனையர் (Thangam Debbonaire) எனும் தமிழ் பெண்ணொருவரும் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னரும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை இவர் வெற்றியீட்டுவாராயின் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவரும் ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் லேபர் கட்சியின் முக்கியஸ்தராகவும் திகழ்வதுடன் இவர் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவது ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுக்கு மிகப் பெரிய பலமாகவும், வலுச் சேர்க்கும் ஒன்றாகவும் இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...