23 6557436fb5687
உலகம்செய்திகள்

கனடாவில் நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இருந்த இளைஞர்… கடைசி நொடியில் ஏற்பட்ட திருப்புமுனை

Share

உகாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுவந்த தன்பாலின ஈர்ப்பாளர் இளைஞர் ஒருவர் கடைசி நொடியில் வெளியான தகவலால் நிம்மதியடைந்துள்ளார்.

அத்துடன் ஏழு மாத தற்காலிக குடியுரிமை அனுமதி மற்றும் பணி செய்ய அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய இளைஞரின் சட்டத்தரணியான Michael Battista உறுதி செய்துள்ளார்.

ஆனால் அந்த இளைஞரின் போராட்டமானது ஓயவில்லை என்றும், அவருக்கு நிரந்தரவதிவிட அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அடுத்த ஆண்டு அவர் தகுதிபெறும் போது மேலும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் Michael Battista குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த இளைஞர் தெரிவிக்கையில், தற்போது தாம் நிம்மதியாக உணர்வதாகவும், தமது கோரிக்கை கேட்கபட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஒரு சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்ததாகவும் 2018 முதல் எட்மண்டனில் வசித்து வருவதுடன் செவிலியராகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வேலைக்கான விசா காலாவதியாகவும், அகதி அந்தஸ்து கோரி மனு அளித்துள்ளார். ஆனால் அந்த மனுவும், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேல்முறையீடு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2023 மே மாதம் உகாண்டா அராசங்கமானது தன்பாலின ஈர்ப்பாளர்களை குற்றவாளிகள் என்ற சட்ட திருத்தம் கொண்டுவந்தது. உகாண்டா சட்டத்தின் கீழ், தீவிரமான தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நிலையில், உகாண்டாவில் உள்ள மொத்த குடும்பத்தினரும் தம்மை கைவிட்டுள்ள நிலையில், கனடாவும் கைவிட்டால் தாம் எங்கே செல்வது என்ற குழப்பத்திலேயே இருந்து வந்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஹூதிகளின் அட்டூழியம்… சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு
ஹூதிகளின் அட்டூழியம்… சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்டால், உகாண்டா அதிகாரிகளிடம் சிக்கி, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்றே அச்சத்தில் வாழ்ந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த நெருக்கடியில் இருந்து தற்காலிக விமோசனம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...