rtjy 47 scaled
உலகம்செய்திகள்

மக்களை கூட்டமாக வெளியேற்ற முடிவு செய்த நாடு

Share

மக்களை கூட்டமாக வெளியேற்ற முடிவு செய்த நாடு

செப்டெம்பர் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,500 நிலநடுக்கங்களை சூப்பர் எரிமலை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புவியியல் சங்கத்தின் கூற்றுப்படி, ஒரு சூப்பர் எரிமலை என்பது எரிமலை வெடிப்பு குறியீட்டில் 8 அளவு வெடித்த எரிமலை மையம் என வரையறுக்கப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபிள்ஸுக்கு வெளியே உள்ள Pozzuoli நகரில் வசிப்பவர்கள், காம்பி ஃப்ளெக்ரேயின் எரிமலை பகுதியில் வசிப்பதால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

80-சதுர மைல் தாழ்வான பகுதியில் ஒரு டசின் கூம்பு வடிவ எரிமலைகள், பல ஏரிகள் மற்றும் அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

மேலும் 80,000 மக்கள் இதன் சுற்றுவட்டாரத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தாலிய அரசாங்கம் கடந்த மாதம் நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளதுடன், கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கருதினால், மக்களை மொத்தமாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...