பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்
உலகம்செய்திகள்

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

Share

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர்.

பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பாதிப்பின் அளவு போன்றவற்றின் விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், நடுக்கம் உணரப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அதிர்ச்சியில் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், நான் எனது கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது சிறிய இரைச்சல் சத்தம் கேட்டது, அது பின்னர் பெரிய சத்தத்துடன் எனது கால்களுக்கு கீழே உள்ள தரையை நடுங்க செய்தது, இது ஒருவேளை மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் அல்லது நிலநடுக்கமாக இருக்கும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர் தெரிவித்த தகவலில், இரத்தம் தோய்ந்த பேய் பெட்டியை போல் எனது படுக்கை அசைந்தது என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...