பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்
உலகம்செய்திகள்

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

Share

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர்.

பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பாதிப்பின் அளவு போன்றவற்றின் விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், நடுக்கம் உணரப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அதிர்ச்சியில் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், நான் எனது கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது சிறிய இரைச்சல் சத்தம் கேட்டது, அது பின்னர் பெரிய சத்தத்துடன் எனது கால்களுக்கு கீழே உள்ள தரையை நடுங்க செய்தது, இது ஒருவேளை மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் அல்லது நிலநடுக்கமாக இருக்கும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர் தெரிவித்த தகவலில், இரத்தம் தோய்ந்த பேய் பெட்டியை போல் எனது படுக்கை அசைந்தது என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...