பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்
உலகம்செய்திகள்

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

Share

பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்

பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர்.

பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பாதிப்பின் அளவு போன்றவற்றின் விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், நடுக்கம் உணரப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அதிர்ச்சியில் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், நான் எனது கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது சிறிய இரைச்சல் சத்தம் கேட்டது, அது பின்னர் பெரிய சத்தத்துடன் எனது கால்களுக்கு கீழே உள்ள தரையை நடுங்க செய்தது, இது ஒருவேளை மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் அல்லது நிலநடுக்கமாக இருக்கும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர் தெரிவித்த தகவலில், இரத்தம் தோய்ந்த பேய் பெட்டியை போல் எனது படுக்கை அசைந்தது என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...