5 2 scaled
உலகம்செய்திகள்

நடுவானில் விமானப் பணிப்பெண்ணை மதுபோதையில் கடித்த பயணி: விமானி எடுத்த அதிரடி முடிவு

Share

மது போதையில் பயணி ஒருவர் விமான குழுவை சேர்ந்த பெண் ஒருவரை கடித்ததை தொடர்ந்து விமானம் ஜப்பானுக்கு மீண்டும் திரும்பியது.

ஜப்பானில் இருந்து அமெரிக்கா செல்லும் ANA விமானத்தில் பயணி ஒருவர் உச்சக்கட்ட மது போதையில் விமான குழுவை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை கடித்த சம்பவம் விமானத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்த போது மது போதையில் இருந்த 55 வயது அமெரிக்க பயணி ஒருவர், விமானப் பணிப்பெண் ஒருவரின் கையை கடித்தார், அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் AFPயிடம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி: அவரின் தற்போதைய நிலை என்ன?
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகவும் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து விமானத்தை மீண்டும் ஜப்பான், டோக்கியோவில் Haneda விமான நிலையத்திற்கு விமானி திருப்பி தரையிறக்கினார்.

பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர், இந்த விசாரணையின் போது தான் தூக்க மாத்திரை போட்டு இருந்ததாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்து இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய விமான சேவைகளை பாதிக்கும் சமீபத்திய சம்பவம் இதுவாகும். ANA ஏர்லைன்ஸில் நடைபெறும் இரண்டாவது சமீபத்திய சம்பவம் இதுவாகும்.

Share
தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...