tamilni 224 scaled
உலகம்செய்திகள்

இலங்கை மாணவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: பிரித்தானிய இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம்

Share

பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் பொலிஸாரால் பின்தொடர்ந்து வந்த கார் மோதியதாலையே இலங்கையரான மாணவர் மரணமடைந்ததாக தொடர்புடைய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாட்டிங்ஹாமின் Trent பல்கலைக்கழக மாணவரான 31 வயது Oshada Jayasundera என்பவர் கடந்த டிசம்பர் 13ம் திகதி Huntingdon தெருவில் வாகனம் மோதி, சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த விவகாரத்தில் Joshua Gregory என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதாலையே விபத்து ஏற்பட்டதாகவும், அது இலங்கையரான மாணவர் இறப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது.

இதனால் குறித்த நபருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. 27 வயதான Joshua Gregory-க்கு இந்த வழக்கில் எதிர்வரும் மார்ச் 28ம் திகதி தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், Oshada Jayasundera-வின் சகோதரர் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வர இருப்பதாகவும், தீர்ப்பளிக்கப்படும் நாளும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தனிப்பட்ட அறிக்கை அளிக்க இருப்பதாகவும் சட்டத்தரணி ரிச்சர்ட் தாட்சர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தண்டனையை எதிர்கொள்ளும் ஜோசுவா கிரிகோரி நீண்ட காலமாக உளவியல் பாதிப்பை எதிர்கொண்டு வருபவர் என அவரது தரப்பு சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...