tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

பாலியல் அடிமைகளாக 1500 சிறார்களா? மத வழிபாட்டு தலைவரின் செயல்

Share

பாலியல் அடிமைகளாக 1500 சிறார்களா? மத வழிபாட்டு தலைவரின் செயல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தன்னை கடவுள் என கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து 1,500 சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டவரான Jey Rence B Quilario என்பவர் உருவாக்கிய விசித்திர குழுவிடம் தற்போது 1,500 சிறார்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Save The Children என்ற அமைப்பு அந்த சிறார்களை மீட்க களமிறங்கியுள்ளது.

அத்துடன் Quilario என்ற அந்த நபர் போதை மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வருவதாக செனட்டர் ரொனால்ட் டெலா ரோசா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறார்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றும் ஒரு வழிபாட்டு முறை உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள செனட்டர் ஒருவர், சிறார்களுக்கு கட்டாயத் திருமணம் போன்ற கொடுமைகளை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல என்றார்.

ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் அடிமையாக கொண்டுள்ள ஒரு குழு அது, அதன் தலைவர் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான ஒரு நபரின் கைகளில் தற்போது சிறார்கள் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குழுவானது தொடக்கத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகவே இயங்கி வந்துள்ளது. ஆனால் 2017ல் Omega de Salonera என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், விசித்திரமான மத வழிபாட்டு குழுவாகவும் மாறியது.

மட்டுமின்றி, தங்கள் குழுவில் இணைந்து கொள்ளாதவர்கள் நிலநடுக்கத்தில் சிக்கி கொல்லப்படுவார்கள் எனவும் விளம்பரம் செய்தது. தற்போது முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த குழு நிராகரித்துள்ளதுடன், சிறார்களை பாலியல் அடிமைகளாக பாதுகாத்து வருவது என்பது வெறும் கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த குழுவில் தற்போது 1,580 சிறார்கள் உட்பட 3,500 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...