MediaFile 4 2
உலகம்செய்திகள்

பிரதமர் மெலோனியைத் தொடர்ந்து பெண் செயலாளரின் முகத்தைப் புகழ்ந்த டிரம்ப்: புதிய சர்ச்சை!

Share

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெண்களின் தோற்றம் குறித்துத் தான் வெளியிடும் கருத்துக்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியிடம் அவர் பேசியதையடுத்து, தற்போது தனது வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) குறித்துப் பேசிய கருத்துக்கள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.

அண்மையில் இத்தாலிப் பிரதமர் மெலோனியிடம், “நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்” என்று டிரம்ப் கூறியது உலகளவில் பேசு பொருளானது. “இதை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்” எனவும் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்தார்.

பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் ட்ரம்ப், தமது நிர்வாகத்தின் பொருளாதார வெற்றிகள் குறித்துப் பேசியபோது, “இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவள் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் (non-stop mouth like a little machine gun) உள்ளார்” என்று பேசியுள்ளார்.

ட்ரம்பின் இந்த இரு பேச்சுகளும் தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...