10 4
உலகம்செய்திகள்

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ள மெலானியா ட்ரம்ப்

Share

ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ள மெலானியா ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக்(Donald Trump) கொலை செய்ய முயன்ற விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உருவாகியுள்ள நிலையில், அந்த விடயம் தங்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளதாக ட்ரம்பின் மனைவி மெலானியா (Melania) தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்ப் பல்வேறு வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்துவந்தார் எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து மெலானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, என் கணவரை அந்த பயங்கர குண்டு தாக்கியதைக் கண்டபோது, என் வாழ்வும், என் மகன் வாழ்வும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருப்பதாக உணர்ந்தேன்.

அதாவது, தங்கள் வாழ்வே மாறும் ஒரு நிலை காணப்பட்டது. அத்துடன், என் கணவரை பாதுகாப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தைரியமாக செயல்பட்ட இரகசிய பாதுகாப்பு சேவை முகவர்களுக்கும் சட்டத்துறை அதிகாரிகளுக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...

05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...