உலகம்செய்திகள்

4,000 டொலர்களை கடித்துக் குதறிய செல்லப்பிராணி: அதிர்ச்சியில் ஆழ்ந்த தம்பதியர்

24 65991f7833825
Share

அமெரிக்காவில், ஒரு தம்பதியரின் செல்லப்பிராணியாகிய நாய் ஒன்று, 4,000 டொலர்கள் பணத்தைக் கடித்துக் குதறியதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் வாழும் தம்பதியர் கிளேய்ட்டன் மற்றும் கேரி லா. (Clayton, Carrie Law). வேலி அமைப்பதற்காக காண்ட்ராக்டர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கிளேய்ட்டன் 4,000 டொலர்களை வங்கியிலிருந்து எடுத்து, ஒரு கவரில் போட்டு மேசையில் வைத்திருந்திருக்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் அறைக்குத் திரும்பிய கிளேய்ட்டன், பணத்தை தங்கள் செல்ல நாயாகிய சிசில் கடித்துக் குதறிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சத்தமிட்டுள்ளார்.

அதைக் கேட்டு தனக்கு இதயமே நின்றுவிட்டது போலிருந்ததாக தெரிவிக்கிறார் கேரி (33).

தம்பதியர், நாய் கடித்துக் குதறிய பணத்தை சேகரித்து எவ்வளவு பணம் கிழியாமல் பத்திரமாக உள்ளது என்று பார்க்க, 450 டொலர்கள் மட்டுமே நாசமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பணத்துடன் தம்பதியர் வங்கிக்குச் சென்று நடந்ததைக் கூற, வங்கி ஊழியர்களோ, இப்படி அடிக்கடி நடப்பதாகவும், கிழிந்த பணத்தில் சீரியல் நம்பர் மட்டும் சரியாக தெரிந்தால், அதற்கான பணத்தை திருப்பிக் கொடுப்பதாகவும் தெரிவிக்க, தம்பதியர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....