27 1
உலகம்செய்திகள்

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

Share

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

ஜேர்மனி, 1949இல் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிந்தபோது, அதனிடம் போதுமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.

ஆனால், 1990இல் கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜேர்மனியானபின், ராணுவத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என கருதப்பட்டதால் ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2000இல், ஜேர்மன் ராணுவம் 40 சதவிகித ராணுவ வீரர்களைக் குறைத்துவிட்டது.

ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜேர்மன் ராணுவம் மீண்டும் ஆட்களை சேர்க்கத் துவங்கியுள்ளது.

திரைப்படங்களில் விளம்பரம், விளம்பர போர்டுகள், அவ்வப்போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் முகாம்கள் என மக்களை ராணுவத்தின்பால் ஈர்க்கத் துவங்கியுள்ளது ஜேர்மனி.

விளைவு, இன்று ஜேர்மன் ராணுவத்தில் 179,000 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நேட்டோ அமைப்பின் ஆறாவது பெரிய ராணுவம் என்னும் பெருமையை எட்டியும், ஜேர்மனி திருப்தியடையவில்லை. 2031இல் 203,000 ராணுவ வீரர்கள் என்னும் இலக்கை நியமித்துள்ளது.

ஆக, நேற்று வரை அலுவலகங்களில் பணியாற்றி வந்த பொதுமக்கள் பலர், இன்று ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரே காரணம், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதுதான். ரஷ்யா உக்ரைன் போரைப்பார்த்து, திடீரென போர் என்னும் நிலை உருவானால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்னும் எணம் ஜேர்மனிக்கு வந்துவிட்டது.

ஆக, போர் வந்தால் அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...