3 8 scaled
உலகம்செய்திகள்

எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த வைத்தியர்

Share

எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த வைத்தியர்

இந்திய மாநிலம், ஆந்திராவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் எலுமிச்சை மற்றும் சாம்பலை கொடுத்து 50 ஆயிரம் ரூபாயை டாக்டர் ஒருவர் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் ஆயுர்வேத கிளினிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிளினிக்கை டாக்டர் ஒருவர் தனியாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தலைவலி மற்றும் நரம்பு பகுதியில் வலி இருப்பதாக கூறி சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவர், ஆயுர்வேத சிகிச்சையை பெற அங்கு சென்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த டாக்டர் மருந்துகளை கொடுப்பதற்கு பதிலாக எலுமிச்சை மற்றும் சாம்பலை ஒரு சிறிய பையில் கொடுத்துள்ளார்.

பின்பு, அமாவாசை தினத்தன்று பூஜைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். பூஜை அறையில் அந்த பெண்ணை அமரவைத்து மந்திரங்களை உச்சரித்துள்ளார்.

மேலும், பூஜை பொருள்கள் எனக்கூறி மளிகை பொருளையும் வாங்கி வரக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ரூ. 50 ஆயிரம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...