1780448 usa
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பம்

Share
Share

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி உலகம் பூராகவுள்ள இந்துக்களால் 24 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. அமெரிக்காவின் பல மாகாணங்களின் தலைநகர், ஆளுநர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

வெள்ளை மாளிகையில் வருகிற 24 ஆம் திகதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் பஙகுபற்ற ஏராளமான இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்நது 26 ஆம் திகதி வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15 ஆம் திகதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

#worldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக...

5 4
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் : அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்களாக்களில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார...

4 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால...

3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக...