Diana princess Wales 1989
உலகம்செய்திகள்

சார்லஸை கடுமையாக பழிவாங்கிய இளவரசி டயானா

Share

சார்லஸை கடுமையாக பழிவாங்கிய இளவரசி டயானா

பிரித்தானிய இளவரசி டயானா மற்றும் சார்லஸின் கசப்பான விவாகரத்து சம்பவம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்போதைய இளவரசர் சார்லஸை பிரிய முடிவு செய்ததும், தமது வாழ்க்கையில் இனி சார்லஸ் குறித்த எந்த நினைவுகளும் வேண்டாம் என டயானா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இளவரசர் சார்லஸின் உடைகளை வரை அவர் தீயிட்டு கொளுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 1981ல் மிக ஆடம்பரமாக சார்லஸ்- டயானா தம்பதியின் திருமணம் நடந்தது.

இருப்பினும் அவர்களின் வயது வித்தியாசம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட கருத்து காரணமாக அவர்களின் குடும்ப வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில், 1991ல் இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும், விவாகரத்து பெறும் எண்ணம் அவர்கள் இருவரிடமும் அப்போது இல்லை என்றே கூறப்படுகிறது. இருவரும் ஒருமனதாக பிரிவதாக முடிவு செய்ததும், உடனடியாக கென்சிங்டன் அரண்மனையில் 8 மற்றும் 9ம் தளத்தின் பூட்டுகளை டயானா மாற்றியுள்ளார்.

கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்கை
அத்துடன் புதிய தொ,லைபேசி இலக்கம் ஒன்றையும் பெற்றுள்ளார். ஆனால் வேறு வழியின்றி சார்லஸ் தமது உடைமைகள் அனைத்தையும் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்கு மாற்றியுள்ளார்.

இதனிடையே, சார்லஸ் விட்டுச் சென்ற அனைத்து பொருட்களையும், உடைகள் உட்பட டயானா தீயிட்டு கொளுத்தியுள்ளார். இருவரும் தனியாக பிரிந்தாலும், விவாகரத்துக்கு ராணியார் ஒப்புதல் அளிக்க பல ஆண்டுகள் நீண்டது.

1996ல் கடைசியாக சார்லஸ் – டயானா தம்பதி விவாகரத்து பெற்றனர். இதற்கு ஓராண்டு முன்னர், அரச குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்கை ஒன்றை டயான முன்னெடுத்தார்.

1995ல் பிபிசி ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், சார்லஸ் உடனான திருமணத்தில் நாங்கள் மூவர் உட்பட்டிருந்தோம் என்றார். இந்த ஒற்றை வரி அரச குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. டயானா குறிப்பிட்ட அந்த மூன்றாவது நபர் தற்போதைய பிரித்தானிய ராணியார் கமிலா என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...