image 147408 1694700717
உலகம்செய்திகள்

நாடு ஒன்றில் காட்டுத்தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்: 778 பேர் பலி

Share

நாடு ஒன்றில் காட்டுத்தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்: 778 பேர் பலி

வங்கதேசத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 778 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
வங்கதேச நாட்டில் அதிர்ச்சி தரும் வகையில் படுவேகமாக டெங்கு காய்ச்சலானது பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு வங்கதேச நாட்டில் 778 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தான் இந்த டெங்கு காய்ச்சல் தொற்றானது அதிகரித்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் டெங்கு பாதிப்புகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை, அவ்வாறு செய்யப்பட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தற்போது உள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்களை விட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா சிறுவர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சரியான டெங்கு ஒழிப்பு கொள்கைகள் இல்லாததே இவ்வளவு பெரிய நெருக்கடியை வங்கதேசம் சந்திப்பதற்கான முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் இங்குள்ள பல பேருக்கு டெங்கு பாதிப்பிற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்த போதிய பயிற்சிகள் வேண்டும் என்று டாக்கா மூத்தா மருத்துவர் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் முகமது நியாதுஸ்மான் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...