4 25 scaled
உலகம்செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாயம்: காணாமல் போன முக்கிய நபர்கள்

Share

சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாயம்: காணாமல் போன முக்கிய நபர்கள்

சீனாவில் ஊழல் விசாரணையை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அமைச்சர் திடீரென்று மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் திடீரென்று மாயமாவது தற்போது அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் விசாரணை வட்டத்தில் இருந்துள்ளார்.

இந்த அமைப்பானது விசாரணை முன்னெடுக்கிறது என்றால், தொடர்புடைய நபர் கட்சி விதிமுறைகள் அல்லது நாட்டின் சட்டங்களை மீறியுள்ளதாகவே கருதப்படுவார். மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் ராணுவ அதிகாரி என்றால் கட்சி சார்ந்த விசாரணை அமைப்பே விசாரித்து தண்டனை வழங்கும்.

பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு மாயமாகும் முன்னர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் கடந்த ஜூன் 25ம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார். ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் 10 பேர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகத்து 29ம் திகதி கடைசியாக பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு பொதுவெளியில் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, ஆகத்து தொடக்கத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கும் லி ஷாங்ஃபு சென்று வந்துள்ளார்.

லி ஷாங்ஃபு நாடு திரும்பிய சில நாட்களில் விசாரணை துவங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், செப்டம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் வியட்நாம் பயணத் திட்டத்தை செப்டம்பர் 3ம் திகதி பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது.

இதேப்போன்று, ரஷ்யா மற்றும் வியட்நாம் அதிகாரிகளை சந்தித்து திரும்பிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் அதன் பின்னர் மாயமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை தொடக்கம் முதல், சீனாவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் சியாவோ யாகிங் மாயமாகியுள்ளார். இன்னொரு ராணுவ தளபதி 60 வயதான Li Yuchao மாயமாகியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே இவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...