36
உலகம்செய்திகள்

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு

Share

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 28 சதவிகித மக்கள் மட்டுமே ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 66 சதவிகிதம் மக்கள் ஒரு பிரதமராக, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்புகளிலோ, ஆளும் லேபர் கட்சியைவிட எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மக்கள் என்னை விரும்பவில்லை என்றாலும், கனடாவும், கனேடியர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய என்ன செய்வது என்பதை யோசித்து, அதற்காக முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என்று கூறியுள்ளார் ட்ரூடோ.

சமீப காலமாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவர என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்துவருகிறார் ட்ரூடோ. Podcastகளில் பங்கேற்பது, பேட்டிகள் கொடுப்பது, யூடியூப் சேனல்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவது, ஏன் பெண்கள் கூடைப்பந்து விளையாட்டு குறித்த நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு பேசிவருகிறார் ட்ரூடோ.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...