24 664aec6277bcd
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?

Share

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகள் ஏற்படலாம்?

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் உயிரிழந்தது உண்மையானால், அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில், ஈரான் ஆதரவு போராளிக்குழுக்களான, லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள் முதலான குழுக்களும் தலையிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் காரணமாக, இஸ்ரேல் ஈரானை தனக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்த்துவருகிறது. ஈரானோ, தன்னை பாலஸ்தீனத்தின் புரவலனாக, ஆபத்பாந்தவனாக கருதிக்கொண்டுள்ளது. ஈரான் தலைவர்கள் பலர் பல ஆண்டுகளாக இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே காணாமல்போகச் செய்யவேண்டுமென சூழுரைத்துவருகிறார்கள்.

ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசியோ, கடந்த மாதம்கூட, இஸ்ரேல் கடந்த 75 ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக கொடுமையான அநியாய செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்றும், ஆகவே முதலாவது அவர்களை அகற்றவேண்டும் என்றும், இரண்டாவது, அவர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்யவேண்டும் என்றும் மூன்றாவதாக, அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில், ஏற்கனவே இஸ்ரேல் மூத்த ஈரானிய ராணுவ அதிகாரிகளையும், அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதாக நம்பப்படுகிறது.

ஈரான் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் விபத்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. அத்துடன், இஸ்ரேல் தரப்பு இதுவரை ஹெலிகொப்டர் விபத்து குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவும் இல்லை.

என்றாலும், ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விடயம், ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து விரும்பத்தகாத மோதல்களை உருவாக்கி போரை பெரிதாக்கிவிடக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...