tamilnaadij 2 scaled
உலகம்செய்திகள்

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

Share

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை பகல் 10 மணியளவில் குடியிருப்பு உரிமையாளரால் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியால் அந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நிரப்பட்ட திரவம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணம் தடயவியல் நோயியல் நிபுணரால் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...