நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் விளம்பரம்
உலகம்செய்திகள்

டைட்டானிக் கப்பலை காண விருப்பமா..? நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் விளம்பரம்

Share

நீர்மூழ்கி விபத்துக்கு பிறகும் விளம்பரம்!

1912ம் வருடம், “டைட்டானிக்” எனும் சொகுசு கப்பல் வட அட்லாண்டிக் கடலில் தனது முதல் பயணத்திலேயே மூழ்கியதும், 1500 பேர் பலியானதும், உலகளவில் இன்று வரை பேசப்படும் ஒரு சோக நிகழ்வாக இருக்கிறது.

ஆழ்கடலில் தரைதட்டி நிற்கும் அந்த “டைட்டானிக்” கப்பலை காண அவ்வப்போது முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்தகைய ஒரு முயற்சியாக இரு வாரங்களுக்கு முன், ஆழ்கடல் ஆராய்ச்சி சுற்றுப்பயணத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஓஷன்கேட் நிறுவனத்தின் “டைட்டன்” நீர்மூழ்கியில், டைட்டானிக் கப்பலை காண அதன் மாலுமி உட்பட 5 பேர் பயணித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நீர்மூழ்கி வெடித்து, அதில் பயணம் செய்த ஐவரும் பலியானார்கள். இதனால் ஆழ்கடல் சுற்றுப்பயண திட்டங்களை காலவரையின்றி மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, அடுத்த ஆழ்கடல் சுற்றுப்பயணத்துக்கான ஓஷன்கேட் நிறுவன விளம்பரம் தொடர்ந்து இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டைட்டானிக் கப்பலை காண விரும்புவோருக்கான சுற்றுபயண விபரங்களையும், கட்டணத்தையும் அதன் இணையதளத்தில் மீண்டும் விளம்பரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின்படி, ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை காணும் சுற்றுப்பயணத்திற்கு பயணத்தொகை சுமார் ரூ.2 கோடிக்கு மேலாகிறது. ஒரு பயணம் அடுத்த ஆண்டு ஜூன் 12ல் தொடங்கி ஜூன் 20 வரையிலும் மற்றொன்று ஜூன் 21 தொடங்கி ஜூன் 29 வரையிலும் என 2 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: முதல் நாளன்று பயணிகள், கடலோர நகரமான செயின்ட் ஜான்ஸுக்கு வர வேண்டும். அதன் பிறகு தங்களுடன் பயணம் செய்யும் குழுவினரை அவர்கள் சந்தித்து கப்பலில் ஏறுவார்கள். அக்குழு நீர்மூழ்கியில் டைட்டானிக் புதையுண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கிருந்து டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கான 400 நாட்டிகல் மைல் பயணத்தை தொடங்கும் போது, கப்பலில் வாழ்க்கைமுறையைப் குறித்து பயணிகள் உணர்ந்திருப்பார்கள்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம், காணாமல் போன, “டைட்டன்” நீர்மூழ்கியை தேடும் பணிகள் நடந்து வரும்போதே, “துணை பைலட்” (sub pilot) பணிக்கு ஆட்களை தேர்வு செயவ்து தொடர்பாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், அதற்கு எழுந்த கடும் விமர்சனங்களால், அது அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
116511320 indoncavepig
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு! 67,800 ஆண்டுகள் பழமை!

மனித நாகரிகத்தின் தொடக்ககால கலைத்திறனைப் பறைசாற்றும் வகையில், உலகின் மிகப்பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள்...

26 696eccc62b9b4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் சாமர சம்பத்திற்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

55618d90 f52f 11f0 b5f7 49f0357294ff 1
செய்திகள்உலகம்

ஜப்பான் நாடாளுமன்றம் அதிரடியாகக் கலைப்பு! பெப்ரவரி 8-ல் பொதுத்தேர்தல்: பிரதமர் சனே தகாச்சியின் அரசியல் காய்நகர்த்தல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்றே மாதங்களில் நாட்டின்...

IMG 20230111 134430 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழீழ வைப்பக நகைகள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சிறிதரன் கேள்வி! அரசாங்கத்தின் வாக்குறுதியை நினைவூட்டல்!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, போர்க்காலத்தின் போது...