7 2
உலகம்செய்திகள்

கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

Share

கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலாப நோக்கமற்ற வகையில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்ற நிலையில் குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கினை ஊடறுத்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட பத்து மில்லியன் டொலர் பணம் கிரிப்டோ நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பவுன்டேசன் எஸிஸ்டிங் கனடிய டெலன்ட் ஒன் ரெக்கார்டிங்ஸ் (The Foundation Assisting Canadian Talent on Recordings) என்ற அமைப்பினால் இந்த அமைப்பின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் கனடாவின் ஸ்கொட்டி வாங்கி பொறுப்பு சொல்ல வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையவழி கடவு சொல் போன்றவற்றை இந்த நிறுவனம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் இதனால் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...