உலகம்செய்திகள்

கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

7 2
Share

கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் (Canada) ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலாப நோக்கமற்ற வகையில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்ற நிலையில் குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கினை ஊடறுத்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட பத்து மில்லியன் டொலர் பணம் கிரிப்டோ நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பவுன்டேசன் எஸிஸ்டிங் கனடிய டெலன்ட் ஒன் ரெக்கார்டிங்ஸ் (The Foundation Assisting Canadian Talent on Recordings) என்ற அமைப்பினால் இந்த அமைப்பின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் கனடாவின் ஸ்கொட்டி வாங்கி பொறுப்பு சொல்ல வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையவழி கடவு சொல் போன்றவற்றை இந்த நிறுவனம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் இதனால் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...