25 1
உலகம்செய்திகள்

மாறுவேடத்தில் வாழும் வேற்று கிரகவாசிகள்

Share

மாறுவேடத்தில் வாழும் வேற்று கிரகவாசிகள்

வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கின்றது.

அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்ட வரும் நிலையில் இந்த புதிய விபரத்தை ஹவார்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் இதுவரையில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளில் சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பறக்கும் தட்டுக்கள் நிலத்தின் கீழ் மறைத்து வைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சில வேலை அவை மனித சமூகத்துடன் ஒன்றிணைந்து போய் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேற்று கிரகவாசிகள் அல்லது இந்த பூமிக்கு வெளியேயான விடயங்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம் பாரிய அளவிலான பறக்கும் தட்டு ஒன்றை மறைத்து வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளிட்டிருந்தார்.

இந்தப் பேரண்டத்தில் நாம் தனித்து வாழ்கின்றோமா அல்லது வேறும் உயிரினங்கள் பல்வேறு கிரகங்களில் காணப்படுகின்றனவா என்பது குறித்த மர்மத்தை கண்டறியும் முனைப்புகள் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரையில் திடமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆய்வு அறிக்கை இன்னமும் மீளாய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...