download 2 1 22
உலகம்செய்திகள்

நாக்கு வெட்டப்பட்ட பசு மாடுகள் !

Share

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், முகம் சிதைக்கப்பட்ட பசு மாடுகளில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேடிசன் கவுண்டி பகுதியில் 6 வயதான பசு மாடு ஒன்று இவ்வாறு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்தே குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய பசு மாடு துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை என்றே பொலிசார் கூறுகின்றனர். மட்டுமின்றி, பசு மாட்டின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வண்டியின் தடங்கள் அல்லது கால் தடங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், அப்பகுதியில் புற்கள் கூட சேதப்படுத்தப்படவில்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், காட்டு விலங்குகள் எதுவும் அந்த பசு மாட்டை தொட்டுப்பார்க்கவும் இல்லை என கூறுகின்றனர். இதன் பின்னரே, மேலும் 5 பசு மாடுகள் இதேப் போன்று நாக்கு வெட்டப்பட்டு அல்லது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த 6 பசு மாடுகளும் எவ்வாறு மரணமடைந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...