download 2 1 22
உலகம்செய்திகள்

நாக்கு வெட்டப்பட்ட பசு மாடுகள் !

Share

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் பசு மாடுகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இதே நிலையில் 6 பசு மாடுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட பசு மாடுகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதாகவே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், முகம் சிதைக்கப்பட்ட பசு மாடுகளில் ரத்தக்கறை எதுவும் காணப்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேடிசன் கவுண்டி பகுதியில் 6 வயதான பசு மாடு ஒன்று இவ்வாறு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்தே குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய பசு மாடு துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இல்லை என்றே பொலிசார் கூறுகின்றனர். மட்டுமின்றி, பசு மாட்டின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் வண்டியின் தடங்கள் அல்லது கால் தடங்கள் எதுவும் சிக்கவில்லை எனவும், அப்பகுதியில் புற்கள் கூட சேதப்படுத்தப்படவில்லை என்றே கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், காட்டு விலங்குகள் எதுவும் அந்த பசு மாட்டை தொட்டுப்பார்க்கவும் இல்லை என கூறுகின்றனர். இதன் பின்னரே, மேலும் 5 பசு மாடுகள் இதேப் போன்று நாக்கு வெட்டப்பட்டு அல்லது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த 6 பசு மாடுகளும் எவ்வாறு மரணமடைந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...

04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...