24 6605b8198caac
உலகம்செய்திகள்

மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது தெரியுமா

Share

மூன்று தலைநகரங்களை கொண்ட நாடு எது தெரியுமா

ஆபிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் உள்ள தென்னாபிரிக்கா மூன்று தலைநகரங்களை கொண்டுள்ளது.

நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குறித்த மூன்று தலைநகரங்களும் பெயரிடப்பட்டுள்ளன.

இதன்படி, கேப் டவுன், பிரிட்டோரியா மற்றும் ப்ளூம்ஃபோன்டைன் ஆகிய நகரங்கள் தென்னாபிரிக்காவின் தலைநகரங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

பல தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் தென்னாபிரிக்கா குறிக்கப்படுகிறது.

கடந்த 1910 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா ஒன்றுபட்ட நாடாக உருவாக்கப்படும் போது, அந்தந்த பகுதிகளில் வசித்த மக்கள் தத்தமது பகுதியையே தலைநகராக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடந்தியுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்கா பரந்துபட்ட நாடாக காணப்பட்டமையும், அதன் ஒட்டுமொத்த பரப்பளவு 1.22 மி.ச.கி.மீ ஆக காணப்பட்டமையும் இதற்கு முதன்மையான காரணிகளாகும்.

ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வெகு தொலைவில் உள்ள தலைநகருக்கு செல்லும் அவசியம் ஏற்பட்டதால் தான் தென்னாபிரிக்காவின் தலைநகரை மூன்றாக பிரித்து வைத்துள்ளனர்.

நாடாளுமன்றம் அமைந்துள்ள இடமாகவும் சட்டமன்ற தலைநகரமாகவும் கேப் டவுன் அமைந்துள்ளது.

இதையடுத்து, அதிபர் மற்றும் அமைச்சரவையின் இடமாகவும் நிர்வாக தலைநகரமாகவும் பிரிட்டோரியா விளங்குகின்றது.
அத்துடன், மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தின் இடமாகவும் நீதித்துறையின் தலைநகரமாகவும் ப்ளூம்ஃபோன்டைன் திகழ்கிறது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...