8 2
உலகம்செய்திகள்

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு: வத்திக்கானின் அறிவிப்பு

Share

எதிர்வரும் திங்கட்கிழமை(05.05.2025) புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடைபெறும் என எதிர்பார்ப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரை தேர்தெடுப்பதற்காக கர்தினால்கள் வத்திக்கானில் கூடிவருகின்றனர்.

துக்க காலம் முடிந்த பிறகு, மே 5 அல்லது 6ஆம் திகதிகளில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாநாடு சிஸ்டைன் தேவாலயத்தில் இரகசியமாக நடைபெறவுள்ளது.

அத்துடன், புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கு மூன்றில் ஒரு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பின்னர், இத்தாலிய கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டக்லே மற்றும் கானாவின் கார்டினல் பீட்டர் டர்க்சன் ஆகியோர் விருப்பத் தேர்வுகளாக உள்ளனர்.

இந்நிலையில், 80 வயதிற்குட்பட்ட 135 கர்தினால்கள் மட்டுமே மாநாட்டில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...