6 32
உலகம்

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

Share

இளவரசர் ஹரியின் நிதி நிலைமை குறித்து கவலை: அள்ளிக் கொடுத்த மன்னர் சார்லஸ்

பிரித்தானிய இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் வருவாய்க்கு என்ன செய்வார் என மன்னர் சார்லஸ் கவலையிலிருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி தன்னிடமிருக்கும் பணம் செலவழிந்துபோனால், அதற்குப் பின் என்ன செய்வார் என அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கு கவலை இருப்பதாக ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட் ஜாப்சன் (Robert Jobson) என்பவர் தெரிவித்துள்ளார்.

என்றாலும், தன் பிள்ளைகள் எப்போதுமே கஷ்டப்படக்கூடாது என்னும் எண்ணம் கொண்டவர் சார்லஸ்.

ஹரி தனது தொலைக்காட்சி பேட்டிகளிலும், தன் சுயசரிதைப் புத்தகத்திலும், தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதியதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவரது வருவாயில் பின்னடைவு ஏற்படத் துவங்கியது.

ஆகவே, தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சார்லஸ் ஹரிக்கு கணிசமான தொகை ஒன்றைக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரான ராபர்ட். அத்துடன், அவருக்கு வழங்கும் நிதி உதவியை அவர் முற்றிலும் நிறுத்திவிடவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

Share
தொடர்புடையது
22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...

9 2
உலகம்செய்திகள்

ஈரானின் அதிரடி அறிவிப்பு! அடுத்த நாளே நிகழ்ந்துள்ள பாரிய மாற்றம்

ஈரானின் ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, ஈரான் நேற்று அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய தினம்...

10 3
உலகம்செய்திகள்

ஈரானின் அணு வசதி சேதம்: செயற்கைக்கோள் படங்களின் அதிர்ச்சி வெளிப்பாடு

ஈரானின் ஃபோர்டோ அணுமின் நிலையத்தின் மீதான அமெரிக்கத் தாக்குதலின் ஆழமாகப் புதைக்கப்பட்ட தளமும் அது வைத்திருந்த...

5 8
உலகம்செய்திகள்

பதிலடி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்! ஈரானின் விமான நிலையங்கள் மீது சரமாரியான தாக்குதல்

ஈரானில் விமான நிலையங்களை தாக்கி F-14 போர் விமானம் மற்றும் ஏவுகணை களஞ்சியங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல்...