உலகம்செய்திகள்

கடும் குளிரால் மூடப்பட்ட பாடசாலை… சகோதரர்கள் இருவருக்கு குடியிருப்பில் நேர்ந்த துயரம்

Share

கடும் குளிரால் மூடப்பட்ட பாடசாலை… சகோதரர்கள் இருவருக்கு குடியிருப்பில் நேர்ந்த துயரம்

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வெள்ளியன்று கடும் குளிர் நிலவியதால், பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், குடியிருப்பில் தங்கிய இரு சகோதரர்கள் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்பில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் தீ மளமளவென பரவியதில், 4 மற்றும் 6 வயதுடைய சகோதாரர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் மாகாணம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

சிறுவர்களின் தாயார் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். வெடிப்பு சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் துரித நடவடிக்கை இருந்தபோதிலும்,

தீயின் தீவிரம் காரணமாக மீட்பு முயற்சிகள் தாமதமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜன்னல் வழியாக நுழைந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவர்கள் இருவரையும் தேடியுள்ளனர்.

ஆனால் உரிய நேரத்தில் அவர்களை காப்பாற்ற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. சிறார்கள் இருவரின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 145,000 டொலர் அளவுக்கு பொதுமக்கள் நிதியுதவி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...