24 664d0cf9cc15c
உலகம்செய்திகள்

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Share

ஈரானில் உள்நாட்டு போர் உருவாகலாம் : எச்சரிக்கும் நிபுணர்கள்

ஈரானில் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விபத்தில் மரணமடைந்தமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஜனாதிபதி ரைசியின் மரணம், அவரது இடத்திற்கான போட்டியை அதிகார மையத்தில் உருவாக்கும் என்றே நிபுணர்கள் தரப்பின் கணிப்பாக உள்ளது.

அப்படி ஒரு நிலை உருவானால், அது நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் உண்மையான மொத்த அதிகாரமும் உச்சத் தலைவரின் வசமே உள்ளது, ஜனாதிபதியிடம் அல்ல.

ஆனால் அதிகார பகிர்வு தொடர்பில் மோதல் ஏற்படும் என்றால், ஈரான் மீண்டும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக பிரித்தானிய வரலாற்றாசிரியர் Anthony Glees தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் தற்போது ஜனாதிபதி பொறுப்பு 68 வயதான Mohammed Mokhber என்பவரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.

இவர் உச்சத் தலைவருக்கு மிக நெருக்கமானவர் என்றே கூறுகின்றனர்.

இன்னொருவர் 55 வயதான Mojtaba Khameini. இவர் உச்சத் தலைவரின் மகன். இவர் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டில் பெரும் விவாதங்கள் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...