முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி
உலகம்செய்திகள்

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி

Share

முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி!

28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா என்ற சிம்பன்சி சுமார் 28 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலிபோர்னியா சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த வெனிலா தற்போது புளோரிடா சரணாலயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது, முதல்முறையாக வெளி உலகை பார்த்தது வெனிலா. முதலில் வெளியே வர தயக்கம் காட்டிய வெனிலா சிம்பன்சி, வெளியே வந்து ஆச்சரியமாக அங்கும், இங்கும் வியப்பாக வானத்தை பார்த்தது.

இதன் பின்னர் வெளியே வந்த வெனிலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தது. மற்ற சிம்பன்சி குரங்குகளை வெனிலா கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

இது குறித்து மீட்புப் பணியாளர்கள் கூறுகையில், 28 வயதான வெண்ணிலா என்ற சிம்பன்சி புளோரிடாவில் உள்ள சரணாலயத்தில் முதன்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தபோது “பிரமிப்பில்” ஆழ்ந்தது என்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...