24 663dbeb1790fd
உலகம்செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

Share

உலகிலேயே முதல் முறையாக… Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த ஒரு பிரித்தானியக் குழந்தை, உலகிலேயே முதன்முறையாக Gene therapy மூலம் செவித்திறனை மீண்டும் பெற்றுள்ளதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த Jo மற்றும் James Sandy (33) தம்பதியரின் மகளான Opal Sandy என்னும் குழந்தை, auditory neuropathy என்னும் பிரச்சினை காரணமாக பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்தாள்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜிலுள்ள Addenbrooke’s மருத்துவமனையில், பேராசிரியர் Manohar Bance என்பவர் தலைமையில், சோதனை முறையில், Opalக்கு Gene therapy என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை, எதிர்பார்த்ததைவிட நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கிறார் அவர்.

இந்த சிகிச்சையில், கேட்கும் பிறன் பாதிப்புக்குக் காரணமான DNA, ஆபத்தை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றின் உதவியுடன் சரிசெய்யப்படுகிறது.

இந்த அரிய சோதனை முறை சிகிச்சைக்குப் பின், Opal கேட்கும் திறனை பெற்றுள்ளாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு மெதுவாகப் பேசுவதைக் கூட தெளிவாகக் கேட்கும் திறனைப் பெற்றுவிட்ட அவள், அம்மா, அப்பா என அழைப்பதைக் கேட்டு சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் Jo மற்றும் James தம்பதியர்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...